அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்கார துயர சம்பவம் குறித்து முதலமைச்சர் இதுவரை பதிலளிக்காதது ஏன்?. அண்ணா பல்கலைக்கழகத்தில் திடீரென்று சிசிடிவி கேமராக்கள் பழுதானது ஏன்?, இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என அமைச்சர் மன்றாடியது ஏன்?. மாணவர்கள் போராட்டம் நடத்தும் வரை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாதது ஏன்?. அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் திமுகவைச் சேர்ந்தவரா? என்பதை மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். மிக முக்கியமான கல்லூரியிலேயே இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் பொழுது இங்கு படிக்கும் மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை மட்டும் அடக்குவதால், மாணவிக்கு நடந்த கொடூரம் இல்லை என்று ஆகிவிடாது. எனவே ஜனநாயக ரீதியாக கேள்விகள் கேட்பவர்களுக்கும், போராடுபவர்களுக்கும், இந்த அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். அந்த மாணவிக்கு ஏற்பட்டது போல் இனி எந்த மாணவிகளுக்கும், பெண்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படாத வண்ணம் இந்த அரசு பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு முதலமைச்சர் பதில் தர வேண்டி அறிக்கை
Releated Posts
தேமுதிக தலைமை கழகம் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும் 07.02.2025 வெள்ளிக்கிழமை…
சின்னக்கவுண்டர் படத்தின் தயாரிப்பாளர் திரு.V.நடராஜன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி
சின்னக்கவுண்டர் படத்தின் தயாரிப்பாளர் திரு.V.நடராஜன் அவர்கள் (வயது 70) உடல் நலக்குறைவால் மறைந்துவிட்டார் என்று செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேப்டனுக்கு மிகச்…
தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக தமிழக அரசு அறிவிக்க வேண்டி அறிக்கை
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக 19.08.2024 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில், கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக…
மத்திய பட்ஜெட் அறிவித்தது குறித்து அறிக்கை
இந்தியாவுக்கு முக்கியமான ஒரு திட்டமாக இருப்பது நதிகள் இணைப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம், GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல்…