Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினரைக் கைது செய்ததைக் கண்டித்து அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினரைக் கைது செய்ததைக் கண்டித்து அறிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில், அவர்களை கைது செய்து ஜனநாயகத்தை அடக்கும் திமுக அரசின் இந்த செயல் நிச்சியமாகக் கண்டிக்கக் கூடிய விஷயம். அதிமுகவினர் மாணவிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக கடமை, இதைத் தமிழக அரசு தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே ஜனநாயக ரீதியாகப் போராடுபவர்களைக் கைது செய்வதன் மூலம் அடக்கிவிடலாம் என்று இந்த அரசு மனக்கோட்டை கட்ட கூடாது. இது தவறான முன் உதாரணம், இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. எனவே கைது செய்தவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச…

ByBySenthil KumarFeb 7, 2026

பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு…

ByBySenthil KumarFeb 3, 2026

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வந்த 22 வயது பெண்ணை, அங்கு வேலை செய்து வந்த உணவக…

ByBySenthil KumarJan 30, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...