Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை வரவேற்று அறிக்கை – 02.06.2025

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கில் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பை வரவேற்று அறிக்கை – 02.06.2025

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதித்தது வரவேற்கத்தக்கது. இனிவரும் காலங்களில் யாரும் இதுபோன்று தவறு செய்யாமல் இருக்க இந்த தண்டனைகள் வழிவகுக்கும். நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இனி வரும் காலங்களில் இந்த தீர்ப்பு இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் இந்தக் குற்றத்திற்கு பின்புலத்திலிருந்து ஞானசேகரனை இயக்கியது யார்?, இதற்கு பின் எவ்வளவு அரசியல் சக்தி கொண்ட பின்புலம் இருப்பவர்களாக இருந்தாலும், அவர்களையும் நீதியரசர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். அப்போது தான் இந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை நாம் அடைந்ததாக அர்த்தம்.

Releated Posts

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டி அறிக்கை – 20.06.2025

தமிழகத்தில் இந்த (2025) ஆண்டு ‘மா’ (மாம்பழம்) விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான விலை மிக, மிக குறைவாக இருப்பதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் தர்பூசணி…

ByBySenthil KumarJun 20, 2025

காவலர்களுக்கான பதவி உயர்வில் பாகுபாடு காட்டும் தமிழக அரசை கண்டித்து அறிக்கை

காவலர்களுக்கான பதவி உயர்வில் முன்னுக்குப் பின் முரணான அரசாணையை வெளியிட்டு காவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த…

ByBySenthil KumarJun 18, 2025

மண்டலம் வாரியாக மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் புரட்சியாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் மண்டலம் வாரியாக மாவட்ட தேர்தல் பணி…

ByBySenthil KumarJun 11, 2025

மருத்துவ கல்வி முறையில், மிக்ஸோபதி (MIXOPATHY) பாடத்திட்டத்தை கைவிட்டு, பாரம்பரிய வைத்திய முறைகளை நவீனப்படுத்த வேண்டி அறிக்கை 

புதுச்சேரியில் செயல்படும் உலகப்புகழ் வாய்ந்த மருத்துவக் கல்வி நிறுவனமான ஜிப்மர் (Jipmer) நிறுவனத்தில் மத்திய அரசு MBBS- BAMS பாடத்திட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்து, புதியதோர் கல்வி முறையை செயல்படுத்தும் திட்டம்…

ByBySenthil KumarJun 6, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...