Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அடக்குமுறையை கைவிட்டு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி அறிக்கை

அடக்குமுறையை கைவிட்டு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி அறிக்கை

சமூக நலப்பணியாளர்கள், செவிலியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காண வேண்டிய ஆளும் அரசு, அதற்கு மாறாக காவல்துறையின் மூலம் அதிரடியாக கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. போராட்டம் என்பது ஜனநாயகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை. அந்த உரிமையை பயன்படுத்தி தங்களின் வாழ்வாதார பிரச்சனைகளை முன்வைக்கும் உழைப்பாளிகளை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். கைது செய்வதை விட, அவர்களின் வாழ்க்கைக்கு உண்மையில் என்ன தேவை என்பதை உணர்ந்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும். திடீர் திடீர் கைது நடவடிக்கைகள் மூலம் போராட்டங்களை அடக்க முயல்வது ஜனநாயக விரோத செயலாகும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் எனவும் தேமுதிக சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டி அறிக்கை

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டிற்கு உரிய…

ByBySenthil KumarMay 25, 2026

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி…

ByBySenthil KumarMay 23, 2026

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை  கண்டித்து அறிக்கை

கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும்…

ByBySenthil KumarMay 23, 2026

கேப்டன் காட்டிய பாதையில் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்

அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarMay 23, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...