Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

LIC பெண் அதிகாரி கல்யாணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மதுரை மேலவெளி வீதியில், ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) கட்டிடத்தின் அலுவலகத்தில், 20.12.2025 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், தனியறையில் சிக்கியிருந்த முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்தார். இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், கல்யாணியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த குற்றவாளியான ராமகிருஷ்ணனை கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். கடமையின்போது நேர்மையாகவும் உண்மையுடன் செயல்பட்ட ஒரு பெண் அதிகாரியை, அவர் செய்த தவறை சுட்டிக்காட்டியதற்காக கொடூரமாகக் கொலை செய்துள்ள இந்த செயல் கடுமையாயன கண்டனதிற்குறியதும், மனிதநேயமற்றதும் ஆகும். இத்தகைய கொடிய குற்றங்கள் கடுமையாக தண்டிக்கப்படாத பட்சத்தில், சட்டத்தை நம்பி நேர்மையுடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சமூகத்தில் சட்டத்தின் மீது நம்பிக்கை இன்மையையும் இது ஏற்படுத்தும். எனவே, இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு LIC அலுவலகத்தில் வேலையும், இழப்பீடு தொகையும் வழங்கிட வேண்டும்.  மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி…

ByBySenthil KumarMay 23, 2026

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை  கண்டித்து அறிக்கை

கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும்…

ByBySenthil KumarMay 23, 2026

கேப்டன் காட்டிய பாதையில் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்

அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarMay 23, 2026

தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.…

ByBySenthil KumarMay 22, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...