பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் தங்களின் அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் யாரும் மனம் தளராமல் உங்களுக்கான அடுத்தடுத்த நல்வாய்ப்புகளை முழுத் திறமையோடும், கூடுதல் கவனத்தோடும் பயன்படுத்தி, விடாமுயற்சியுடன் படித்து வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்த வெற்றி உங்கள் எதிர்காலக் கல்வி மற்றும் உயரிய லட்சியங்களுக்கான அடித்தளம். உயர்கல்வியிலும் நீங்கள் சிறந்து விளங்கி, சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக மாற வாழ்த்துகிறேன்.




