Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் நிர்வாக அலட்சியம் தமிழக அரசு கவனம் செலுத்த வலியுறுத்தி அறிக்கை

சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் நிர்வாக அலட்சியம் தமிழக அரசு கவனம் செலுத்த வலியுறுத்தி அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளி சூரஜ் என்பவரை, 17 வயது நான்கு சிறுவர்கள் போதையில் வடமாநிலத்தவரை அரிவாளால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வெளியான காணொளி மூலம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கொடூர சம்பவங்கள், இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதன் விளைவாக சமீப காலங்களில் கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு சட்டம் ஒழுங்கை முழுமையாகக் கையில் எடுத்துக் கொண்டு, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தி, இத்தகைய குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதேபோல், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அண்ணா அறிவாலயம், கலைஞர் நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழகத்தில் நிலவும் நிர்வாக அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில், தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

கடலூர் மாவட்டத்தில் நடக்கும் 09.01.2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்

வ. எண்நேரம்நிகழ்ச்சிகள்12.45 மதியம்கழக கொடி ஏற்றுதல்23.20 மாலைதமிழ் தாய் வாழ்த்து பாடல்33.23 மாலைபரத நாட்டியம் (டாக்டர்.சுகந்தி)43.28 மாலைகேப்டனை பற்றிய கவிதை (மோனிகா ஸ்ரீ)53.40 மாலைகேப்டனின்…

ByBySenthil KumarJan 6, 2026

தேமுதிக தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarJan 1, 2026

இனிய புத்தாண்டு வாழ்த்து செய்தி

இன்பம் பெருகும், துன்பம் ஒழியும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நன்நாளிலிருந்தாவது தங்களின்…

ByBySenthil KumarDec 31, 2025

கேப்டனின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

பெரும் திரளாக திரண்டு வந்து கேப்டனின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையில் (28.12.2025) கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி மற்றும் தமிழக துணை முதமைச்சர்…

ByBySenthil KumarDec 29, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...