Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டி அறிக்கை

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டி அறிக்கை

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளம், பண்டிகை முன்பணம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 41 மாதங்கள் முடிந்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றாமல் வேடிக்கை பார்க்கலாமா?. திமுக வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து இருந்தால், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கின்ற பணச் சலுகைகள் கிடைத்து இருக்கும். தற்போது கிடைக்கின்ற சொற்ப ஊதியம் 12,500 ரூபாயை வைத்து குடும்பங்கள் நடத்த முடியாமல் தவித்து வருகின்றார்கள். எனவே தீபாவளி பண்டிகை கொண்டாட அக்டோபர் மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் எனப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். அதுபோல், பண்டிகை முன்பணம் வழங்கி அதனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் கேட்டு வருகின்றார்கள். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தீபாவளி கொண்டாட குறைந்தபட்சம் இந்த கோரிக்கையை, இந்த அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன். 13 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற பகுதிநேர ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்தி, காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் செய்து அதனை தீபாவளி பரிசாக அறிவிக்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணானதை கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை காலம் தொடங்கும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையால்…

ByBySenthil KumarJun 24, 2026

ஆளும் தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களை குறித்து அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதல்வர் விஜய் அவர்களின் புகைப்படத்தைக் காட்டி அவரின்…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...