10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் தங்களின் அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் யாரும் மனம் தளராமல் உங்களுக்கான அடுத்த தேர்வில் முழுத் திறமையோடும், கூடுதல் கவனத்தோடும் விடாமுயற்சியுடன் படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த வெற்றி உங்கள் எதிர்காலக் கல்வி மற்றும் உயரிய லட்சியங்களுக்கான அடித்தளமாக அமையும். வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களின் அடுத்தகட்ட மேல்நிலை படிப்பு பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து, சிறந்த முறையில் கல்வியைத் தொடர நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.




