உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மார்ச் 8 ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை 10.00 மணிக்கு தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும், மாவட்டத்தில் உள்ள மகளிர் அணியினர் இக்கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் கட்சி புடவை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம். மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேமுதிக
தலைமை கழகம்,
(கேப்டன் ஆலயம்)
கோயம்பேடு,




