பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நேற்று (05.05.2026) நிகழ்ந்த வாகன விபத்தில் அவர் உயிரிழந்தார் என்கிற செய்தி மிகவும் மனதிற்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ்தயாரிப்பில் கேப்டன் நடிப்பில் வெளியான முக்கியத் திரைப்படம் கண்ணுபடப்போகுதய்யா போன்ற பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியவர். அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான ஒரு மனிதர். அவரது இழப்பு திரையுலகிற்கு பேரிழப்பு. அவருடைய ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் திரையுலகினருக்கும், குடும்பத்தாருக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.




