Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற உறுதியோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் திருநாளாகப் பொங்கல் திருநாள் திகழ்கிறது. இந்நன்னாளில், உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில் மாட்டுப் பொங்கல் திருநாளும் இதனுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளிலிருந்தாவது, எதிர்வரும் காலங்களில் தமிழக மக்கள் தங்களின் கஷ்டங்கள் நீங்கி, நிம்மதியும் வளமையும் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் என விரும்புகிறோம். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும், உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டுமென, கேப்டன் சார்பாகவும், எனது சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

“தமிழன் என்று சொல்லடா” “தலைநிமிர்ந்து நில்லடா”

“வீழ்வது நாமாக இருப்பினும்” “வாழ்வது தமிழாக இருக்கட்டும்”

Releated Posts

விருத்தாசலம் தொகுதியில் வறுமை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி

புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் தர்காக்களில் சிறப்பு…

ByBySenthil KumarAug 25, 2026

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...