தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) இன்று (08.03.2026) கழக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் மகளிர் அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அனைத்து மகளிர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கழக துணைச் செயலாளர் திருமதி.சுபா ரவி அவர்கள், கழக மகளிர் அணி செயலாளர் திருமதி.மாலதி வினோத் அவர்கள், கழக மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி.சுபமங்களம் டில்லிபாபு அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள், நகர மகளிர் அணி நிர்வாகிகள், பகுதி மகளிர் அணி நிர்வாகிகள், பேரூர் மகளிர் அணி நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொண்டனர்.


















