விழுப்புரத்தில் அனைத்து இடங்களிலும் இன்னும் மழை நீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இருக்கும் மழை நீரை தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, மழை நீர் எங்கெல்லாம் தேங்கி நிற்கிறதோ, அதை உடனடியாக அப்புறப்படுத்தி, நோய் பரவாமல் தடுத்து, அங்கு வாழ்கின்ற மக்களுக்கு இயல்பான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசுத் தொல்லையும், இதனால் தொற்று நோய் அபாயம் இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 25 நாள் ஆகியும் மழை நீர் வடியாத இந்த அவல நிலை கண்டிக்கத்தக்கது. எனவே அரசு ராட்சத மோட்டார் பைப் கொண்டு உடனடியாக மழை நீரை அகற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
