Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • விழுப்புரத்தில் 25 நாள் ஆகியும் மழை நீரை அகற்றாததைக் கண்டித்து அறிக்கை

விழுப்புரத்தில் 25 நாள் ஆகியும் மழை நீரை அகற்றாததைக் கண்டித்து அறிக்கை

விழுப்புரத்தில் அனைத்து இடங்களிலும் இன்னும் மழை நீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இருக்கும் மழை நீரை தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, மழை நீர் எங்கெல்லாம் தேங்கி நிற்கிறதோ, அதை உடனடியாக அப்புறப்படுத்தி, நோய் பரவாமல் தடுத்து, அங்கு வாழ்கின்ற மக்களுக்கு இயல்பான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசுத் தொல்லையும், இதனால் தொற்று நோய் அபாயம் இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 25 நாள் ஆகியும் மழை நீர் வடியாத இந்த அவல நிலை கண்டிக்கத்தக்கது. எனவே அரசு ராட்சத மோட்டார் பைப் கொண்டு உடனடியாக மழை நீரை அகற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர்…

ByBySenthil KumarAug 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...