Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • “மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டி அறிக்கை – 20.06.2025

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டி அறிக்கை – 20.06.2025

தமிழகத்தில் இந்த (2025) ஆண்டு ‘மா’ (மாம்பழம்) விளைச்சல் அதிகமாக இருந்தாலும், அதற்கான விலை மிக, மிக குறைவாக இருப்பதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் தர்பூசணி பழம் பருவகாலங்களின் விளைச்சலின் போதும், தர்ப்பூசணியில் மருந்து கலந்து உள்ளது என்று வதந்திகளை பரப்பியதால் மிகக் குறைந்த விலைக்கு போனதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இப்படி தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் மிகவும் துயரமான ஒரு நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு உடனடியாக விவசாயிகள் பிரச்சனையில் கவனம் செலுத்தி, அவர்கள் விளைவித்த பொருளுக்கான உரிய விலையை கிடைக்கச் செய்ய வேண்டும். மாம்பழ விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு இந்த அரசு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி விவசாயிகளைக் காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பான செயலாளர்களுக்கு நீதியளிக்க தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச…

ByBySenthil KumarFeb 7, 2026

பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு…

ByBySenthil KumarFeb 3, 2026

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வந்த 22 வயது பெண்ணை, அங்கு வேலை செய்து வந்த உணவக…

ByBySenthil KumarJan 30, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...