Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நுழைவாயிலை உரியப் பாதுகாப்பு இல்லாமல் இடித்ததைக் கண்டித்து அறிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நுழைவாயிலை உரியப் பாதுகாப்பு இல்லாமல் இடித்ததைக் கண்டித்து அறிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் தோரண நுழைவாயிலை அகற்றும் போது தூண் சாய்ந்து மேலே விழுந்ததில் ஜேசிபி (JCB) ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். அருகில் நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர் படுகாயம் அடைந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி நுழைவாயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மதுரை மாநகராட்சி உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் செயல்பட்டதால் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. அரசின் இந்த கவனக்குறைவு மிகவும் கண்டிக்கக் கூடிய விஷயம். பிரதான சாலையில் உள்ள மிகப் பழைமையான நுழைவாயில் இடிக்கப்படுகிறது என்றால் திட்டமிடுதல், மக்களுக்கு முன் எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அதன் பிறகு பணியைத் தொடராமல் மெத்தனப் போக்காக செயல்பட்டுள்ளது, மதுரை மாநகராட்சியின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். மேலும் படுகாயம் அடைந்தவருக்கு மருத்துவச் சிகிச்சையும், நிதி உதவியும் வழங்க வேண்டும் எனத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி…

ByBySenthil KumarMay 23, 2026

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை  கண்டித்து அறிக்கை

கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும்…

ByBySenthil KumarMay 23, 2026

கேப்டன் காட்டிய பாதையில் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்

அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarMay 23, 2026

தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.…

ByBySenthil KumarMay 22, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...