Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நுழைவாயிலை உரியப் பாதுகாப்பு இல்லாமல் இடித்ததைக் கண்டித்து அறிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நுழைவாயிலை உரியப் பாதுகாப்பு இல்லாமல் இடித்ததைக் கண்டித்து அறிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் தோரண நுழைவாயிலை அகற்றும் போது தூண் சாய்ந்து மேலே விழுந்ததில் ஜேசிபி (JCB) ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். அருகில் நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர் படுகாயம் அடைந்துள்ளார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி நுழைவாயிலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மதுரை மாநகராட்சி உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் செயல்பட்டதால் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. அரசின் இந்த கவனக்குறைவு மிகவும் கண்டிக்கக் கூடிய விஷயம். பிரதான சாலையில் உள்ள மிகப் பழைமையான நுழைவாயில் இடிக்கப்படுகிறது என்றால் திட்டமிடுதல், மக்களுக்கு முன் எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அதன் பிறகு பணியைத் தொடராமல் மெத்தனப் போக்காக செயல்பட்டுள்ளது, மதுரை மாநகராட்சியின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். மேலும் படுகாயம் அடைந்தவருக்கு மருத்துவச் சிகிச்சையும், நிதி உதவியும் வழங்க வேண்டும் எனத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

Releated Posts

கஞ்சா போதை ஆசாமிகளால் படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் படுகொலையை கண்டித்து அறிக்கை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக கள்ளப்பட்டியைச் சேர்ந்த போலீஸ்காரர் திரு.முத்துக்குமார் பணியாற்றி வந்தார். நாவலூர் பட்டியைச் சேர்ந்த பொன்வண்ணன் மற்றும் அவர்களின்…

ByBySenthil KumarMar 28, 2025

சென்னையில் செயின் பறிப்பு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த காவல் துறையை வரவேற்று அறிக்கை

சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது…

ByBySenthil KumarMar 27, 2025

தேமுதிக இஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பத்திரிக்கை செய்தி – 22.03.2025

“இஃதார் நோன்பு” திறப்பு நிகழ்ச்சி தேமுதிக தலைமை அலுவலகத்தில், இன்று (22.03.2025) மாலை 6.00 மணியளவில், தேமுதிக கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில்…

ByBySenthil KumarMar 22, 2025

பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி

தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை…

ByBySenthil KumarMar 19, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...