Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூன்று பேரை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டி அறிக்கை

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மூன்று பேரை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டி அறிக்கை

கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு கல்லூரி மாணவி ஒருவர் தன் காதலருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவர் வாகனத்தை தாக்கி அந்த பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது வன்மையாக கண்டிக்க கூடியது. பாலியல் வன்கொடுமை யார் செய்தார்கள் என்பதை கண்டறிந்து உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். கோயம்புத்தூர் விமான நிலைய என்பது முக்கியமான பகுதி, அந்த இடத்திலேயே இது போன்ற செயல்கள் நடக்கிறது என்றால் காவல்துறை என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி மக்களுக்கு எழுகிறது. அதேபோல் சிசிடிவி கேமரா அனைத்து இடத்திலும் செயல்படுகிறதா? இல்லையா? என்பதையும் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே அண்ணா பல்கலை கழகத்தில் இது போன்ற செயல்கள் நடந்திருக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. நேற்று கோயம்புத்தூர் விமான நிலையம் அருகில் நடந்த பாலியல் வன்கொடுமை இனி எங்கும் நடக்காத வண்ணம் காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக கவனம் செலுத்தி, பெண்களுக்கும், மாணவிகளுக்கும் உறுதியான பாதுகாப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சிசிடிவி கேமராவை அனைத்து இடத்திலும் பொருத்தி, தவறுகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பையும், சிகிச்சையும் தரவேண்டும். இனிமேல் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை எங்கும் நடக்காத வண்ணம் தமிழக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணானதை கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை காலம் தொடங்கும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையால்…

ByBySenthil KumarJun 24, 2026

ஆளும் தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களை குறித்து அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதல்வர் விஜய் அவர்களின் புகைப்படத்தைக் காட்டி அவரின்…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...