Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே இரு வேறு பகுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே இரு வேறு பகுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவங்கள் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளன. சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் 12 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமும், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறப்படும் சம்பவமும் மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. குறிப்பாக, சிறு குழந்தைகள் மீதான இத்தகைய குற்றங்கள் சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கும் வகையில் உள்ளன. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து பொதுமக்களிடையே அச்சமும் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இந்த அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தின் குறைபாடுகளுக்கான எடுத்துக்காட்டுகளாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, 3 வயது குழந்தை மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் மனிதநேயத்திற்கும் சமூக நெறிமுறைகளுக்கும் எதிரான, ஏற்றுக்கொள்ள முடியாத கொடூரமான செயலாகும். தமிழக மக்கள் அனைவரும் இந்த அரசு சட்டம்-ஒழுங்கு மேம்படுத்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும், மதுபோதையால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும், போன்ற வாக்குறுதிகளை நம்பி தற்போதைய அரசுக்கு வாக்களித்தனர். ஆனால், இதற்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனைகள் மட்டுமே நிரந்தரத் தீர்வை உருவாக்கும் எனக் கருதுகின்றனர். “அரபு நாடுகளில் வழங்கப்படும் பொதுவெளி தண்டனையோ அல்லது என்கவுண்டரோதான் இதற்கான ஒரே தீர்வு” அதை இந்த அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

Releated Posts

உலக ரத்த தான தினத்திற்கான அறிக்கை

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, தன்னார்வ ரத்த தானம் மூலம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி வரும் அனைத்து ரத்த தானதாரர்களுக்கும் எனது மனமார்ந்த…

ByBySenthil KumarJun 15, 2026

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...