Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக தமிழக அரசு அறிவிக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக தமிழக அரசு அறிவிக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக 19.08.2024 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில், கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவிக்க வேண்டும் எனவும், கேங்மேன் தொழிலாளர்கள் அவரவர்கள் ஊர்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும், ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அப்போதைய தலைமை பொறியாளர் திரு.ராஜேஷ் லக்கானி அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அடுத்த பேச்சு வார்த்தையின் போது தங்களையும் அழைக்கிறோம். அதில் உங்கள் குறைகளை சொல்லுங்கள் நிவர்த்தி செய்கிறோம் என வாய்மொழி உத்தரவு கொடுத்தார்கள். ஆனால் தற்போது 01.02.2025 ஆம் தேதி தொழிற்சங்கத்திற்கும், மின்வாரியத்திற்கும் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைக்கு, கேங்மேன் தொழிலாளர் சங்கத்தை அழைக்காதது ஏன்?. மின்வாரியத்தில் 35 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருந்தபோது, புதிய மின் பாதை அமைப்பதற்கும், போல் நடுவதற்கும் 9,613 கேங்மேன் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் அவர்களைக் கொண்டு மின்வாரியத்தில் உள்ள அனைத்து பணிகளையும் செய்யும்படி AE மற்றும் JE, போர் மேன், அதிகாரிகள் அனைத்து பணிகளுக்கும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நாங்கள் (AE மற்றும் JE, போர் மேன்) சொல்லும் அனைத்து வேலைகளையும் நீங்கள் (கேங்மேன் தொழிலாளர்கள்) செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தியதன் காரணமாக, 75 கேங்மேன் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம், ஆனால் பொதுமக்களுக்கு மின் சேவை செய்து இறந்த தொழிலாளிக்கு எந்த பலனும் கிடையாது. அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் அவர்களிடம் அந்த வேலையை சொல்லவே இல்லை, அவராகவே அந்த வேலையை எடுத்து செய்ததன் விளைவு, அவர் உயிர் இழந்துள்ளார் என்று கூறுகிறார்கள். அதனால் இழப்பீடு தர முடியாது என அலட்சியப் படுத்துகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?. அரசு மின்துறையில் ஒரு முறை தளர்வு என்ற அடிப்படையில் BP NO: 41,42,43,44,45 என்ற அடிப்படையில் மஸ்தூர் பணியாளர்களை கம்பியாளராக (Wireman) அறிவித்தது போல், கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் 28 ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களை இன்று (05.03.2025) கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் திருமதி.எஸ்.பூர்ணஜோதி…

ByBySenthil KumarMar 7, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மகளிர் தின வாழ்த்து செய்தி

சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள் தாயாகவும், தாரமாகவும், சகோதரிகளா இருந்து, தொண்டுக்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக தங்கள் வாழ்வை அர்பணித்து கொள்கிறார்கள். அவர்கள்…

ByBySenthil KumarMar 7, 2025

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு நிவாரண தொகை அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்து  அறிக்கை

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்குத் தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்தது வரவேற்கத்தக்கது. மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 498.80 கோடி…

ByBySenthil KumarFeb 19, 2025

சாராய விற்பனையை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களை படுகொலை செய்தவர்களுக்கு குற்றம் நிரூபணம் ஆனவுடன் மரண தண்டனை வழங்க வேண்டி அறிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தடுக்க முயன்ற எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்கள் இருவர், சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும்,…

ByBySenthil KumarFeb 16, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...