Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற உறுதியோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். உழைப்பிற்கு உயர்வு தேடித் தரும் திருநாளாகப் பொங்கல் திருநாள் திகழ்கிறது. இந்நன்னாளில், உணவு படைக்கும் உழவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில் மாட்டுப் பொங்கல் திருநாளும் இதனுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளிலிருந்தாவது, எதிர்வரும் காலங்களில் தமிழக மக்கள் தங்களின் கஷ்டங்கள் நீங்கி, நிம்மதியும் வளமையும் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் என விரும்புகிறோம். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும், உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டுமென, கேப்டன் சார்பாகவும், எனது சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

“தமிழன் என்று சொல்லடா” “தலைநிமிர்ந்து நில்லடா”

“வீழ்வது நாமாக இருப்பினும்” “வாழ்வது தமிழாக இருக்கட்டும்”

Releated Posts

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணானதை கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை காலம் தொடங்கும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையால்…

ByBySenthil KumarJun 24, 2026

ஆளும் தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களை குறித்து அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதல்வர் விஜய் அவர்களின் புகைப்படத்தைக் காட்டி அவரின்…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...