Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சென்னை திருவொற்றியூரில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை – ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து அறிக்கை

சென்னை திருவொற்றியூரில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரக் கொலை – ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து அறிக்கை

சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பெண் பழ வியாபாரி மாமூல் தர மறுத்ததாக கூறி கொடூரமாக கொலை செய்த ரவுடி, அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அதிகரித்துவரும் ரவுடிகள் கலாச்சாரத்தையும், கூலிப்படையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நிகழும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து, பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காத அரசு, நிர்வாகத்தின் மீதும், காவல் துறையின் மீதும் நம்பிக்கை இழந்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகள் களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

Releated Posts

தேமுதிக சார்பில் மாநிலங்களாவை உறுப்பினராக போட்டியிடுவதற்கு வேட்பாளர் அறிவிப்பு பத்திரிக்கை செய்தி – 05.03.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவதற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் இன்று (05.03.2026) கழக பொதுச்…

ByBySenthil KumarMar 5, 2026

தேமுதிக கழக பொருளாளர் 29வது திருமண நாளை முன்னிட்டு பத்திரிக்கை செய்தி – 05.03.2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் திருமதி.சு.பூர்ணஜோதி அவர்களும் 29வது திருமண நாளான இன்று (05.03.2026) கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா…

ByBySenthil KumarMar 5, 2026

தேமுதிக – 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்தவர்களிடம் மூன்றாவது நாளாக நேர்காணல் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மூன்றாவது நாளாக இன்று (22.02.2026) 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு…

ByBySenthil KumarFeb 22, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...