Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சென்னை கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு தர தவறிய தமிழக அரசை கண்டித்து அறிக்கை

சென்னை கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு தர தவறிய தமிழக அரசை கண்டித்து அறிக்கை

சென்னை கடற்கரையில் விமான சாகச நிகழ்வு சாவு நிகழ்வாக மாறியது கண்டனத்துக்கு உரியது. தமிழக முதல்வர் அவர்களும், தமிழக அரசும் ஒரு மாதமாகவே 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த விமான சாகச நிகழ்ச்சி பார்க்க வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். அதை நம்பி மக்களும் வந்து விட்டனர். ஆனால் அங்கு எந்தவித பாதுகாப்பு முன்ஏற்பாடுகள் செய்யாமல் 5 உயிர்கள் பலியாகி இருக்கிறது. அதுபோல நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வு அரசினுடைய நிர்வாக சீர்கேட்டிற்கு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. உலகமே வியக்க கூடிய அளவு விமானப்படையினர் சாகச நிகழ்வை மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளனர். ஆனால் பாதுகாப்பு தர வேண்டிய தமிழக அரசு எந்தவித பாதுகாப்பும் செய்யாமல் தவறவிட்டது கண்டனத்துக்கு உரியது. மக்கள் நேற்று 5 மணி நேரத்திற்கும் அதிகமாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சரியான போக்குவரத்து வசதி, குடிநீர், கழிவறை மற்றும் அவசர மருத்துவ உதவி போன்ற எந்தவித வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை. வயதானோர், கர்ப்பிணிகள், மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாகச நிகழ்வை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டி அறிவுறுத்தி இருக்க வேண்டும். ஆம்புலன்களையும், குடிதண்ணீர் லாரிகளையும் 100 அடிக்கு ஒரு இடத்தில் நிறுத்தி இருக்க வேண்டும்.  அதைபோல் ரயில்களையும், போக்குவரத்தையும் திட்டமிட்டு செயல் படுத்தியிருக்க வேண்டும். காவல்துறையினர் செய்வதறியாது மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து அவதிப்பட்டு கொண்டு இருக்கும் மக்கள், தமிழக அரசின் விமான சாகச நிகழ்வை காண வந்தும் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தங்களுக்கு மட்டும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டும் கருப்பு கண்ணாடி போட்டு கொண்டும் இருந்ததனாலோ என்னவோ மக்களின் கஷ்டம் அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டதோ?. தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தேமுதிக சார்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

Releated Posts

மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் நிதி வழங்க வேண்டி அறிக்கை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில் மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் திரு.நஃபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் (Tuition)…

ByBySenthil KumarJul 3, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...