Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டை திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை கழக அறிவிப்பு

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டை திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை கழக அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி படுகொலை செய்ததை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக புதுக்கோட்டை, திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் வரும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் கனிம வளத்தை பாதுகாக்க போராடி வந்த சமூக ஆர்வலரை படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், பெண்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மக்களுக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும்.

Releated Posts

மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் நிதி வழங்க வேண்டி அறிக்கை

சென்னை திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில் மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் திரு.நஃபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் (Tuition)…

ByBySenthil KumarJul 3, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்

மருத்துவர்களின்  வரலாற்றில்,   மறக்க    முடியாத     நாள்   இன்று (01-07-2025) மருத்துவர்கள் தினம்! மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாகத் திகழும் நமது தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்குக் குறைவான…

ByBySenthil KumarJul 1, 2025

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை…

ByBySenthil KumarJul 1, 2025

“மா” (மாம்பழம்) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

“மா” (மாம்பழம்) விளைச்சல் செய்யும் விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசை கண்டித்து வரும் (30.06.2025) திங்கள் கிழமை காலை 10 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய…

ByBySenthil KumarJun 23, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...