Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கனிமவள கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்ததை கண்டித்து அறிக்கை

கனிமவள கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்ததை கண்டித்து அறிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்த குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது. இருசக்கர வாகனம் மீது 407 மினி லாரி மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரும் சட்டவிரோத கல் குவாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய நபரான ஜெகபர் அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார். இந்த விசாரணையில் ஜெகபர் அலி விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததால் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேரை திருமயம் போலீசார் கைது செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ் 407 மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் காசி உள்ளிட்ட நான்கு பேர் கைது, மேலும் குவாரி உரிமையாளர் ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து திமுக ஆட்சியில் இது போன்ற கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகி விட்டது சமூக ஆர்வலராக ஒருவர் கனிமவள கொள்ளை நடப்பதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யாததால் அவர் திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்த உண்மை நிலை விசாரணையில் வெளியே வந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை செய்ய வேண்டும். இனி இதுபோன்ற கொலைகள் எங்கும் நடக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு இந்த அரசு அடக்க வேண்டும். உண்மைக்காக குரல் கொடுத்த ஒருவரை கொலை செய்தது எந்த விதத்தில் நியாயம்?. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்ற மக்களின் கேள்விக்கு இந்த அரசு பதில் தர வேண்டும். கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும்.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...