Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி (வயது 19) தவறான அறுவை சிகிச்சை மற்றும் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து செலுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மருத்துவ துறையில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படாததே இந்த இளம் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் என சகமாணவிகள், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் நோயாளி பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. உயிரிழந்த மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு மற்றும் சகமாணவிகளுக்கும் தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான கண்காணிப்பு மற்றும் மருத்துவ தரநிலைகளை தமிழக அரசு உடனடியாக பலப்படுத்த வேண்டும். மேலும் இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். “மருத்துவம் பயிலும் செவிலியருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?” என்ற கேள்விக்குறி அனைவரின் மனதிலும் எழுகிறது.

Releated Posts

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணானதை கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை காலம் தொடங்கும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையால்…

ByBySenthil KumarJun 24, 2026

ஆளும் தவெக ஆட்சியில் அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களை குறித்து அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதல்வர் விஜய் அவர்களின் புகைப்படத்தைக் காட்டி அவரின்…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...