Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி (வயது 19) தவறான அறுவை சிகிச்சை மற்றும் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து செலுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மருத்துவ துறையில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படாததே இந்த இளம் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் என சகமாணவிகள், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் நோயாளி பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. உயிரிழந்த மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கு மற்றும் சகமாணவிகளுக்கும் தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான கண்காணிப்பு மற்றும் மருத்துவ தரநிலைகளை தமிழக அரசு உடனடியாக பலப்படுத்த வேண்டும். மேலும் இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். “மருத்துவம் பயிலும் செவிலியருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?” என்ற கேள்விக்குறி அனைவரின் மனதிலும் எழுகிறது.

Releated Posts

உலக ரத்த தான தினத்திற்கான அறிக்கை

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, தன்னார்வ ரத்த தானம் மூலம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி வரும் அனைத்து ரத்த தானதாரர்களுக்கும் எனது மனமார்ந்த…

ByBySenthil KumarJun 15, 2026

தொடர் மின்வெட்டால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர்…

ByBySenthil KumarJun 12, 2026

மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தமிழகம் முழுவதும் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுடை கண்டித்து அறிக்கை

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும், விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மீண்டும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டரின் விலையை…

ByBySenthil KumarJun 8, 2026

உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து அறிக்கை

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமான பூமியைக் காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.…

ByBySenthil KumarJun 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...