Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ததைக் கண்டித்து அறிக்கை 

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ததைக் கண்டித்து அறிக்கை 

சாம்சங் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசு, இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததை வலியுறுத்தி இன்றைக்குப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் நலன் காப்பதே ஒரு நல்ல அரசாக இருக்க முடியும், ஆனால் அவர்களைக் குண்டு கட்டாகப் போராட்ட களத்திலிருந்து அகற்றுவது ஏற்புடையது அல்ல. இது தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசு செய்யும் வேலையாகவே உள்ளது. எனவே ஏழைப் பங்காளர் என்று தங்களை மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு, உடனடியாக தொழிலாளர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்து அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமே தவிர, அவர்களை அராஜக முறையில் கைது செய்வதோ, குண்டு கட்டாக அப்புறப்படுத்துவது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து, களத்திற்கு சென்று இருக்கும் நிலையில், இந்த கைது நடவடிக்கை என்பது கண்டிக்கத்தக்கதாகும். எனவே “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பது போல் ஆகாமல், சாம்சங் ஊழியர்களுடைய கோரிக்கையை உடனடியாக செவி சாய்த்து தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த அரசு உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

டாக்டர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக பத்திரிகை செய்தி

டாகடர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் அவர்களின் 69-ஆம் ஆண்டு *நினைவு நாளை முன்னிட்டு இன்று (06.12.2025) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

ByBySenthil KumarDec 6, 2025

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) வயது மூப்பின் காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது.  கேப்டனின்  மிகச் சிறந்த நண்பர். கேப்டன்…

ByBySenthil KumarDec 4, 2025

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை

உலகமெங்கும் டிசம்பர் 3ஆம் நாள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நம் உறவினர்களாக வாழும் மாற்றுத் திறனாளிகளுக்கு  இயற்கையினால் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்க உதவ…

ByBySenthil KumarDec 4, 2025

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றி, நிவாரண உதவியும் வழங்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட…

ByBySenthil KumarDec 1, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...